Sunday, July 8, 2007

காதல்

பூக்களின் சினேகிதி நீ என்றொரு செய்தி உண்டு
நான் செம்பருத்தி பூவை கூட நேசிக்க
ஆரம்பித்தது அப்படித்தான்..

ஊரே கவனிக்கிற உலக அழகு நீ ஆனால் எதையும்
கவனிக்காமல் இயல்பாய் இருக்கிறாய் பார் என்
இதயம் சிக்கி கொண்டது அப்படித்தான்..

விளக்கணைக்கிற கையோடு விழுந்து தூங்கிறவன்
எனது நித்திரயை இப்போது நீதான்
தீர்மானிக்கிறாய்..

கள்ளச் சாவிக்கு திறக்காத பூட்டு போட்டு பூட்டி
கொண்டவனை வெறும் ஒரு ஒற்றை
புன்னகையால் உடைத்திருக்கிறாய்..

தேரடி வீதியில் நேரடியாய் என் முகம் பார்க்காமல்
கடந்து சென்று என் முதுகு பார்த்த தேவதையே
உனக்கு தெரிய வாய்ப்பில்லை காதலில் விழுந்தவனுக்கு
உடம்பெல்லாம் கண் என்று...

மெழுகுவர்த்தி

தனக்காக உயிர்த்தியாகம்
செய்த தீக்குச்சிக்காக
அழுது கண்ணீர்
வடிக்கிறது...
மெழுகுவர்த்தி

ஹைக்கூ..

எனது தலைக்கனமே என்னை
அழித்துவிட்டது...
தீக்குச்சி